நாங்குநேரி இடைத்தேர்தல்: "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்" - மாவட்ட ஆட்சியர்

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தெரிவித்துள்ளார்
x
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தெரிவித்துள்ளார். நெல்லை ராமையன்பட்டியில் வைக்கப்பட்டுள்ள, வாக்குப்பதிவு இயந்திரங்களை, பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை மட்டுமே அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்