ஆள்மாறாட்டம் புகார் : மாணவன் ஜாமீன் மனு
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று முறையாக சான்றிதழ் சரி பார்த்த பிறகே தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக கூறியுள்ளார்.
தமது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கல்லூரியிலிருந்து விலகுவதாக கடந்த 12ஆம் தேதி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துவிட்டதாகவும் மாணவன் உதித் சூர்யா தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், கடந்த 17ஆம் தேதி தாம் ஆள்மாறாட்டம் செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதை பார்த்ததாக கூறியுள்ள உதித் , இது முற்றிலுத்ம தவறானது என்று தெரிவித்துள்ளார்.
இரு புகைப்படங்களும் வேறு என்றும், இந்த விவகாரத்தில் தமக்கு தொடர்பில்லை என்றும் மாணவர் உதித் சூர்யா ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த முன்ஜாமீன் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Next Story