"சாலையை சீரமைக்க கோரி பாடல் வெளியிட்ட கட்டுமான தொழிலாளி"

சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ
சாலையை சீரமைக்க கோரி பாடல் வெளியிட்ட கட்டுமான தொழிலாளி
x
நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி கன்னியாகுமரியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஒருவர் பாடி வெளியிட்டுள்ள பாடல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குமரி மாவட்டம் தோட்டியோடு, அழகியமண்டபம், தக்கலை, உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில்,  தக்கலையை சேர்ந்த கட்டுமான தொழிலாளர் ஏ.ஆர்.சுமன், சாலையை சீரமைக்கக் கோரி, பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார்.  அந்த பாடல் குமரி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்