"மருத்துவமனை அருகே பையில் பெண் சிசு மீட்பு : சிசுவை வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை"
சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்று மீட்கப்பட்டது.
சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்று மீட்கப்பட்டது. அரசு மருத்துவமனை அருகே பையில் கிடந்த சிசுவை கண்ட அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இதை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் பெண் உட்பட மூன்று பேர் பைக்கில் வந்து குழந்தையை வீசி சென்றதாக தெரிவித்தனர். இது குறித்து சிதம்பரம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story