"செயற்கை கருத்தரிப்பு என கூறி மோசடி : மருத்துவமனை முன்பு கூலி தொழிலாளி தர்ணா"

ரூ.3 லட்சம் வரை ஏமாற்றிவிட்டதாக புகார்
x
திருவண்ணாமலை ஓரவந்தவாடியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவக்குமாரும் அவரது மனைவியும், கடந்த ஓராண்டாக தனியார் மருத்துவமனை ஒன்றில் செயற்கை கருத்தரிப்பு  மூலம் குழந்தை பெற்று கொள்ள சிகிச்சை பெற்று வந்துள்ளனர். பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு, இருவரும் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற தகுதியானவர்கள் என கூறி மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சையை தொடங்கியுள்ளது. இதற்கு, 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்த‌ நிலையில், திடீரென சிவக்குமாரின் மனைவி பலவீனமாக உள்ளதாகவும் செயற்கை கருத்தரிப்பு சாத்தியமில்லை எனவும தனியார் மருத்துவமனை கைவிரித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார், மனைவியுடன் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்