ரூ.10 லட்சம் மதிப்பிலான கடத்தல் மருந்துகள் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை

கம்போடியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உடல் கட்டமைப்புக்கான மருந்து மற்றும் மாத்திரைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.10 லட்சம் மதிப்பிலான கடத்தல் மருந்துகள் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை
x
கம்போடியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உடல் கட்டமைப்புக்கான மருந்து மற்றும் மாத்திரைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. எட்டு சூட்கேஸ்களுடன் வந்த கொல்கத்தாவை சேர்ந்த ராஜன் மிஸ்ரா என்பவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து  10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உடல் கட்டமைப்பை மேம்படுத்தும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்