நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி
நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மானூர் அருகே ரஸ்தா பகுதியைச் சேர்ந்த விவசாயி போதர் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் மற்றொருவர் அத்துமீறி வீடு கட்டுவதாக கூறி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடக்கும் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தார். உடனே, போலீசாரும் பொதுமக்களும் அவரை மீட்டனர். தீயணைப்பு வாகனத்தில் இருந்து அவர் மீது தண்ணீர் அடிக்கப்பட்டது. பின்னர், அவரை பாளை காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
Next Story