சீன தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற பெண் காவலர் தமிழரசி

சீனாவில் நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சீன தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற பெண் காவலர் தமிழரசி
x
சீனாவில் நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த தமிழரசி, ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். சீனாவில் 77 நாடுகளை சேர்ந்த காவலர்கள் பங்கேற்ற தடகளப்போட்டியில் தமிழரசி பங்கேற்று, வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றார். தற்போது, நாடு திரும்பிய அவரை, சேலம் டிஐஜி பிரதீப் குமார் பாராட்டினார். பதக்கம் வென்ற தமிழரசி கூறுகையில், தனது வெற்றிக்கு காவல் துறை அதிகாரிகள் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்