காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இருவர் உயிரிழப்பு

கரூரில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற வங்கி ஊழியர் மற்றும் கல்லூரி மாணவர் ஆகிய இருவர் ஆற்றில் இழுத்து செலுத்தப்பட்டு உயிரிழந்தனர்.
காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இருவர் உயிரிழப்பு
x
கரூரை சேர்ந்த வங்கி ஊழியர் சூரிய பிரகதீஸ் மற்றும் அவரின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் கார்த்திக் ராஜா, அக்பர் உசேன் ஆகிய மூவரும் நேற்று மாலை புதுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அக்பர் உசேன் ஷாம்பு வாங்க கடைக்கு சென்று திரும்பிய போது, ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்த பிரகதீஸ், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, இருவரையும் ஒரு மணி நேரமாக தேடி பார்த்துள்ளார். இதையடுத்து அவர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினரும் வந்து அவர்களை தேடியுள்ளனர். தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் ஆற்றில் இறங்கி தேடிய போது, சூரிய பிரகதீஸ் உடல் மீட்கப்பட்டது. கார்த்திக் ராஜா உடலை தீயணைப்புத்துறையினர் இன்று காலை தேடி வருகின்றனர். காவிரி ஆற்றில் அதிக தண்ணீர் வருவதால், ஆற்றில் இறங்க கூடாது என எச்சரிக்கை விடுத்தும் இது போல சிலர் செய்வதாக தெரிவித்த மாவட்ட நிர்வாகம், ஆற்றில் இறங்குவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்