குன்றத்தூர் : வண்டி ஓட்ட கற்றுத்தரும் போது விபத்து - பெண் பலி

வண்டி ஓட்ட கற்றுத்தரும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குன்றத்தூர் : வண்டி ஓட்ட கற்றுத்தரும் போது விபத்து - பெண் பலி
x
சென்னை குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி, இளம் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், இளைஞர் ஒருவர் மயங்கி  கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி, இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், இறந்த பெண் அபிநயா என்பதும், காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர் அண்ணாமலை என்பதும் தெரியவந்தது. பணிபுரிந்த இடத்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், வண்டி ஒட்ட கற்றுத்தரும் போது பைக் எதிர்பாராதவிதமாகதடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் அபிநயாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்