கோவையில் சட்டவிரோதமாக கிளிகள் விற்பனை என புகார்
கோவையில் சட்டவிரோதமாக கிளிகள் விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவையில் சட்டவிரோதமாக கிளிகள் விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.சிங்காநல்லூர் பகுதியில் கிளிகளை சிலர் விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அப்போது அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 2 பெண்கள் கூண்டில் அடைத்து வைத்து கிளிகளை விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 29 கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.
Next Story