சத்தியமங்கலம் : ஊருக்குள் நுழைய முயன்ற யானைகள் கூட்டம் - பட்டாசுகள் வெடித்து விரட்டி அடிப்பு
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானைகள் கும்டாபுரம் கிராமத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானைகள் கும்டாபுரம் கிராமத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளன. இதனை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர். வனத்தில் இருந்து யானைகள் வெளியேறாமல் தடுக்கும் வகையில் எல்லைபகுதிகளில் அகழிகளை வெட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story