மூதாட்டியை தாக்கி தங்க செயின் பறிப்பு - பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு

சென்னை தாம்பரம் அருகே வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மூதாட்டியை தாக்கி தங்க செயின் பறிப்பு - பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு
x
சென்னை தாம்பரம் அருகே வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அஸ்தினாபுரம் மகேஸ்வரி பகுதியை சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி வசந்தா. வசந்தா தனியாக வீட்டில் இருந்ததை அறிந்த இளைஞர் ஒருவர் வீட்டில் புகுந்து கட்டையால் வசந்தாவை தலையில் அடித்து, அவர் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார். மூதாட்டியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்