விழுப்புரத்தில் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் புகுந்து நகை, பணம் கொள்ளை

விழுப்புரத்தில் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தில் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் புகுந்து நகை, பணம் கொள்ளை
x
விழுப்புரத்தில் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் சாலாமேடு பகுதியில் வசித்து வரும் வில்லியம் பேட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந் நிலையில், அவரது நிறுவனத்தின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 11 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 15 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மர்ம நபர்கள் தொடர்பான தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்