ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மூலம் தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது - அமைச்சர் காமராஜ்

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மூலம் தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார் .
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மூலம் தமிழகத்திற்கு  எந்த ஒரு பாதிப்பும் கிடையாது - அமைச்சர் காமராஜ்
x
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மூலம்  தமிழகத்திற்கு  எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார் .திருவாரூர் அருகே வெப்பத்தாங்குடியில் கட்டப்பட்டு வரும் பாலத்தை அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 1 கோடியே 99 லட்சத்து 97 ஆயிரம் ரேஷன் கார்டுகள் மின்னனு ரேஷன் கார்டுகளாக மாற்றப்பட்டு  பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் பொதுமக்கள்  பொது வினியோக திட்டத்தின் கீழ் எவ்வித சிரமுமின்றி பொருட்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்