குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
x
நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்