பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை : கணக்கில் வராத 56 கிலோ தங்கம், ரூ 2.2 கோடி பறிமுதல்

பழனி பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 56 கிலோ தங்கம் மற்றும் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
x
வரிஏய்ப்பு புகார் தொடர்பாக பழனி மலை அடிவாரத்தில் உள்ள பிரபல பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை கடை உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 30 ந்தேதி தொடங்கி 3 நாட்கள், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் . அப்போது கணக்கில் வராத 56 கிலோ தங்கம் மற்றும் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்கள் இருவரும் 93 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்