தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை, 10 பெண்கள் உள்பட 50 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில், இந்து முன்னணி சார்பில், தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
x
திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில், இந்து முன்னணி சார்பில், தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், சிலையை அகற்றி, அனுமதி அளித்த இடத்தில் வைக்க அறிவுறுத்தினர். இதற்கு இந்து முன்னணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக சிலையை பறிமுதல் செய்த போலீசார், 10 பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்