லண்டனில் இருந்து இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டனில் இருந்து இந்திய நேரப்படி இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார்.
லண்டனில் இருந்து இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர்
x
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு கடந்த 28ம் தேதியன்று அரசு முறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலில் இங்கிலாந்து சென்றார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அவர், மருத்துவம் மற்றும் மின்சக்தி தொடர்பான தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தார். பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டன. இந்நிலையில், இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, இந்திய நேரப்படி இன்று இரவு அமெரிக்காவுக்கு எடப்பாடி பழனிசாமி புறப்படுகிறார். அமெரிக்க பயணத்துக்கு பிறகு துபாய் செல்லும் அவர், அங்கு தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர், 2 வார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 10ம் தேதியன்று அவர் தமிழகம் திரும்புகிறார்.

Next Story

மேலும் செய்திகள்