போக்குவரத்து பாதிப்பு : 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண்ணுக்கு பிரசவம்

சேலம் மாவட்டம் செம்பூர் மலை கிராமத்தை சேர்ந்த பானுமதி என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போக்குவரத்து பாதிப்பு : 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண்ணுக்கு பிரசவம்
x
சேலம் மாவட்டம் செம்பூர் மலை கிராமத்தை சேர்ந்த பானுமதி என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, குறுகலான பாதையில் மரவள்ளி கிழங்கு ஏற்றி சென்ற லாரி பழுதாகி நின்றதால், ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் பானுமதிக்கு பிரசவ வலி அதிகரித்ததை தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த  அவசர உதவி பணியாளர் அறிவு பிரசவம் பார்த்தார். அப்போது பானுமதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து கருமந்துறையில் இருந்து வந்த மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனத்தில் சேயும் தாயும் பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்