"மாணவிகளை வீட்டுக்கு அழைக்க, பேராசிரியர்களுக்கு தடை" - சென்னை பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு

கல்வி தொடர்பாக கல்லூரி மாணவிகளை வீட்டுக்கோ அல்லது தனிப்பட்ட இடங்களுக்கு அழைக்க கூடாது என பேராசிரியர்களுக்கு, சென்னை பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவிகளை வீட்டுக்கு அழைக்க, பேராசிரியர்களுக்கு தடை - சென்னை பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு
x
கல்வி தொடர்பாக கல்லூரி மாணவிகளை வீட்டுக்கோ அல்லது தனிப்பட்ட இடங்களுக்கு அழைக்க கூடாது என பேராசிரியர்களுக்கு, சென்னை பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், பேராசிரியர்கள், எந்த காரணத்திற்காக அழைத்தாலும் மாணவிகள் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாலியல் தொந்தரவு இல்லாத வளாகமாக மாற்றும் முயற்சி இது என குறிப்பிட்டு உள்ள பதிவாளர், பாலியல் தொந்தரவு இருந்தால், பல்கலைக்கழக பேராசிரியை ரீட்டா ஜான் தலைமையிலான குழுவிடம் எழுத்து பூர்வமாக புகார் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு வேளை மாணவிகள் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பல்கலைக்கழகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். இதனிடையே, மாணவிகள், பேராசிரியர்களுடன் கல்விச் சுற்றுலா செல்லவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்