மருதமலை முருகன் கோவிலில் ரூ.32 லட்சம் உண்டியல் வசூல்

கோவை மருதமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 32 லட்சத்து 19 ஆயிரத்து 624 ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
மருதமலை முருகன் கோவிலில் ரூ.32 லட்சம் உண்டியல் வசூல்
x
கோவை மருதமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 32 லட்சத்து 19 ஆயிரத்து 624 ரூபாய் வசூல் ஆகியுள்ளது. மருதமலை முருகன் கோவிலில் பக்தர்களால் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகளை மாதம் தோறும் எண்ணுவது வழக்கம். இதேபோல் இந்த மாதத்திலும் பொது உண்டியல்கள், திருப்பணி உண்டியல்கள், அன்னதான உண்டியல் மற்றும் காசோலை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் தேவஸ்தான பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 32 லட்சத்து 19 ஆயிரத்து 624 ரூபாயும், 55 கிராம் தங்கமும், 1290 கிராம் வெள்ளியும் வசூல் ஆகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்