திண்டிவனம் அருகே போலி சாமியார் கைது

திண்டிவனம் அருகே பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளான்.
திண்டிவனம் அருகே போலி சாமியார் கைது
x
வேப்பஞ்சாலை தெருவைச் சேர்ந்த அன்பையாவின் மகனான டேனியல் சித்தர் என்பவர் பில்லி, சூனியம் உள்ளிட்ட மாந்திரீக தொழில் செய்து வந்துள்ளார். இவரிடம் தமது மகளின் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு விழுப்புரம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகையன் கூறியுள்ளார். ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.வின் பிரச்சினையை கேட்ட  போலிசாமியார் டேனியல், அடிக்கடி பட்டியல் கொடுத்து பணம் வசூலித்துள்ளார். அவர்கள் சந்தேகம் அடையாமல் இருக்க, வீட்டில் புதையல் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்காக,12 லட்சம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளார். பிரச்சினை தீராத நிலையில், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திலும், ரோசனை காவல் நிலையத்திலும் முருகையன் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து விசாரித்த போலீசார், 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி சாமியாரை கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்