வேளாங்கண்ணி மாதா பேராலய கொடியேற்றம் - செப். 7ம் தேதி தேர் பவனி நிகழ்ச்சி

வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று மாலை நடைபெறுகிறது.
வேளாங்கண்ணி மாதா பேராலய கொடியேற்றம் - செப். 7ம் தேதி தேர் பவனி நிகழ்ச்சி
x
உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி மாதா கோயில் கொடியேற்றத்தைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், ஆண்டுத் திருவிழா களை கட்டியுள்ளது.  இன்று மாலை ஆறரை மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், மாதா உருவம் பொறித்த பேராலாய கொடி ஏற்றப்படுகிறது. கொடியேற்றத்தைக் காண வெளிநாடு மற்றும், இந்தியாவில் உள்ள மும்பை, கோவா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இரண்டாயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி, செப்டம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்