பேருந்து கொள்ளை கும்பல் தலைவன் கைது : உருக்கி வைத்திருந்த ஒரு கிலோ தங்கக் கட்டி பறிமுதல்

கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளை கும்பல் தலைவன் மலைச்சாமியை, ஜி.பி.ஆர். எஸ். மூலம் டிராக் செய்து கைது செய்துள்ளனர்.
x
சென்னை திருவேற்காட்டில் பதுங்கி இருந்த மலைச்சாமி என்பவன், தமிழகம் முழுவதும் பேருந்துகளில் திருடி வந்துள்ளான். ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிடும் அவன், அனைவரும் குனிந்து தேடும் நேரத்தில் கவனத்தை திசை திருப்பி, நகை, பணத்தை கொள்ளை அடித்து வந்துள்ளான். அவன் மீது, 25 வழக்குகள் உள்ள  நிலையில், மலைச்சாமி, இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவன். இதனிடையே, போலீசாருக்கு போக்கு காட்டி வந்த நிலையில், . செல்போன் சிக்னல் மூலம், சென்னை திருவேற்காட்டில் பதுங்கியிருந்த மலைச்சாமியை பிடித்து கோவை கொண்டு சென்றனர். திருடிய நகைகளை உருக்கி, விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். பேருந்து கொள்ளை கும்பல் தலைவன் மலைச்சாமி கைது செய்யப்பட்ட நிலையில், கூட்டாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்