உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு : செப். 4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது.
உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு : செப். 4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
x
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. உதவி பேராசிரியர் தேர்வுக்கு, வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டி தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்