முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. இதற்கான தரவரிசை பட்டியலை கடந்த 22-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில் மொத்தம் உள்ள 16 ஆயிரத்து 728 முதுநிலை பொறியியல் இடங்களில் சேர, 6 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வின் முதல் நாளான இன்று கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 489 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து பிற்பகலில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், டேன்செட் தேர்வில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் 30ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.
Next Story