குப்பைகள் இல்லா மாநகராட்சியாக சென்னையை உருவாக்க விழிப்புணர்வு

குப்பைகள் இல்லா மாநகராட்சியாக சென்னையை உருவாக்கிடும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டி ஒன்று சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது.
குப்பைகள் இல்லா மாநகராட்சியாக சென்னையை உருவாக்க விழிப்புணர்வு
x
குப்பைகள் இல்லா மாநகராட்சியாக சென்னையை உருவாக்கிடும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டி ஒன்று சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது. அண்ணாநகர் டவர் பாக்கில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டியை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் பங்கேற்றவர்கள் மறுசுழற்சி மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை பிரித்தெடுத்தல் பற்றியும், குப்பைகளை பிரித்து வருவாயாக ஈட்டுவது பற்றியும் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரசாரத்திலும்  ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்