குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானது

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. சமீபத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானது
x
குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. சமீபத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும் போது, அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர். தற்போது தண்ணீர் வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்