ஈரான் கப்பலில் சிக்கி தவித்த தமிழக பொறியாளர் சொந்த ஊர் வருகை - அமைச்சர் நேரில் நலம் விசாரிப்பு
இங்கிலாந்து இராணுவத்தால் சிறைபிடிக்கப் பட்ட ஈரான் கப்பலில் 43 நாட்கள் சிக்கி தவித்த தமிழக பொறியாளர் நவீன்குமார் சொந்த ஊர் திரும்பினார்.
இங்கிலாந்து இராணுவத்தால் சிறைபிடிக்கப் பட்ட ஈரான் கப்பலில் 43 நாட்கள் சிக்கி தவித்த தமிழக பொறியாளர் நவீன்குமார் சொந்த ஊர் திரும்பினார். முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தலின்படி அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நவீன்குமார் வீட்டிற்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். நவீன் குமாரை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய-மாநில அரசுகளுக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
Next Story