நாகை எம்.பி. செல்வராஜ் மீது கத்தி வீச்சு

நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் தோழமை கட்சி தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
நாகை எம்.பி. செல்வராஜ் மீது கத்தி வீச்சு
x
நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் தோழமை கட்சி தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அகஸ்தியன்பள்ளி பகுதியில் லட்சுமணன், வேதமணி, லோகு ஆகியோர் குடிநீர் பிரச்சினை இருப்பதாக தெரிவித்ததுடன், தகாத வார்த்தைகளால் எம்.பி. செல்வராஜை விமர்சித்துள்ளனர். ஒருகட்டத்தில் அந்த மூவரில் ஒருவர் செல்வராஜ் மீது கத்தியை வீசியுள்ளார். ஆனால் கத்தி அவர் சென்ற வாகனத்தின் மீது பட்டு கீழே விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் எம்.பி. தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிந்து தலைமறைவான 3 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்