சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொடூர கொலை
சிதம்பரத்தில், நாட்டு வெடி குண்டு வீசி பிரபல ரவுடியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தில், நாட்டு வெடி குண்டு வீசி பிரபல ரவுடியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் , அண்ணாநகரை சேர்ந்த பிரபல ரவுடி கோழி பாண்டியன் நேற்றிரவு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஹோட்டலில் , சாப்பிட்டு கொண்டிருந்த போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர் , அப்போது கோழி பாண்டியன் தப்ப முயன்றதால் மர்ம நபர்கள் அவர் மீது நாட்டு வெடி குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனர் , இதில் கோழி பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் , வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு அங்கு ஆய்வு நடத்தி வெடிக்காத மற்றொரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர். தப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தெரிவித்தார்.
Next Story