பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நாளை திறப்பு- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நாளை திறப்பு- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அவர் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 24 ஆயிரத்து 90 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்