ஆட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் : காவிரியில் கூடுதல் நீர் திறக்கக் கோரிக்கை

காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் : காவிரியில் கூடுதல் நீர் திறக்கக் கோரிக்கை
x
காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறை கேட்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் திடீரென போராட்டம் மேற்கொண்டனர். குறைந்தபட்சம் காவிரியில் 4 ஆயிரம் கனஅடி நீர் திறந்தால் மட்டும் சம்பா சாகுபடிக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உடனடியாக பயிர் காப்பீடு தொகையை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்