ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 2 தமிழர்கள் கைது

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கைலாசகிரி வனப்பகுதியில் செம்மரம் கடத்துவதாக, செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 2 தமிழர்கள் கைது
x
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கைலாசகிரி வனப்பகுதியில் செம்மரம் கடத்துவதாக, செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு போலீசார் சோதனை நடத்திய போது 2 பேர் தப்பி சென்றுள்ளனர். கைதான 5 பேரில் 3 பேர் கடப்பா மாவட்டம்  பொதட்டூரைச் சேர்ந்தவர்கள் என்றும்,  மற்ற இருவரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கைதானவர்கள் அளித்த தகவலின் பேரில் தப்பியோடிய 3 பேர் மற்றும் லால்பாஷா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்