கோவை : காட்டு யானை தாக்கி லாரி ஓட்டுனர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் பன்னிமடை அருகே காட்டு யானை தாக்கியதால் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுனர் உயிரிழந்தார்.
கோவை : காட்டு யானை தாக்கி லாரி ஓட்டுனர் உயிரிழப்பு
x
கோவை மாவட்டம்  பன்னிமடை பகுதியில்  சுற்றி திரியும் காட்டுயானைகள் கணேசன் என்ற லாரி ஓட்டுனரை வழிமறித்து தாக்கின. யானை தூக்கி வீசியதில் கணேசனுக்கு கால்முறிவு ஏற்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியும் , பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்டியடித்து கணேசன் மீட்டனர் . மேல் சிகிச்சைக்காக    கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பன்னிமடை  பகுதியில் சுற்றி திரியும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்