வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்
வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆம்பூர் பகுதியில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story