காங்கேயத்தில் இருசக்கர வாகனத்தில் பதுங்கிய பாம்பு - கையால் பிடித்து வெளியேற்றிய இளைஞர்

காங்கேயத்தில் இருசக்கர வாகனத்தில் பதுங்கிய கொம்பேறி மூக்கன் குட்டி பாம்பை இளைஞர் ஒருவர் கையால் பிடித்து வெளியேற்றினார்.
காங்கேயத்தில் இருசக்கர வாகனத்தில் பதுங்கிய பாம்பு - கையால் பிடித்து வெளியேற்றிய இளைஞர்
x
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருசக்கர வாகனத்தில் பதுங்கிய கொம்பேறி மூக்கன் குட்டி பாம்பை, இளைஞர் ஒருவர் கையால் பிடித்து வெளியேற்றினார். பாரதியார் வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் சாப்பிட சென்ற நேரத்தில், மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு புகுந்தது. பல்வேறு முயற்சிகள் பலனளிக்காத நிலையில், பாம்பு பிடிக்கும் இளைஞர் வரவழைக்கப்பட்டு, பாம்பை பிடித்து வெளியேற்றினர். கையால் அவர் பாம்பை பிடித்தது அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்