குடியாத்தம் அருகே குடியிருப்புக்குள் சாக்கடை நீர் புகுந்தது - தொற்று நோய் ஏற்படும் அபாயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
குடியாத்தம் அருகே குடியிருப்புக்குள் சாக்கடை நீர் புகுந்தது - தொற்று நோய் ஏற்படும் அபாயம்
x
வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. குடியாத்தம்  ஆசிரியர் காலனி, பாண்டியன் நகர், எம்.பி.எஸ். நகர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர் வாரப்படாததால், கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு , நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாய்களை சீர்செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்