கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு - வினாடிக்கு 31,200 கனஅடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு - வினாடிக்கு 31,200 கனஅடி நீர் வெளியேற்றம்
x
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 21 ஆயிரத்து 500 கனஅடியும் கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 31 ஆயிரத்து 200 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. கூடுதல் நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடரும் பட்சத்தில், மேட்டூர் அணை விரைவில் அதன் முழுக் கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்