இலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளர் - ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை

இலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளரை, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளர் - ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை
x
மதுரை, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, அதே பகுதியில் சொந்தமாக டீ கடை நடத்தி வருகிறார்.  இந்த நிலையில் இன்று காலை டீக்கடைக்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரிடம் இலவசமாக டீ கேட்டு தகராறு செய்ததாக  கூறப்படுகிறது.

மாரிமுத்து மறுத்ததை அடுத்து, ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. உயிருக்கு பயந்து சாலையில் ஓடிய மாரிமுத்துவை, அந்த கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்துள்ளது. இதையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிந்த மாரிமுத்துவை மீட்ட அக்கம்பக்கத்தினர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த கொடுர கொலை தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலவசமாக டீ தரவில்லை என்பதற்காக கடை உரிமையாளரை கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்