வெந்தய நிறப்பட்டு அலங்காரத்தில் அத்தி வரதர்... காஞ்சிபுரத்தில் குவிந்த பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் இன்று வெந்தய கலர் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
x
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம்  நடைபெற்று வருகிறது. 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் கடந்த 1 ந்தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 35-வது நாளான இன்று நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் அத்திவரதருக்கு வெந்தய கலர் பட்டு உடுத்தி, மல்லிகை, ரோஜா, துளசி, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அருள் பாலிக்கும் அத்திவரதரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலைமோதி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்