தமிழகத்தில் விரைவில் "ஆவின்" பால் விலை உயர்வு - ரூ. 10 முதல் ரூ. 15 வரை உயர வாய்ப்பு என தகவல்

உற்பத்தி செலவு அதிகரிப்பால், தமிழகத்தில் ஆவின் பால்விலை உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் விரைவில் ஆவின் பால் விலை உயர்வு - ரூ. 10 முதல் ரூ. 15 வரை உயர வாய்ப்பு என தகவல்
x
உற்பத்தி செலவு அதிகரிப்பால், தமிழகத்தில் ஆவின் பால்விலை உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. கொள்முதல் விலையை உயர்த்தும் போது, விற்பனை விலை உயர்வது வழக்கம். அநேகமாக, 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை, விலை உயர வாய்ப்பு உள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் ஆவின் நிர்வாகம் இருப்பதால், இந்த விலை உயர்வு, நிதிச்சுமையை குறைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின், இப்போது தான், தமிழகத்தில் பால் விலை உயர்வு அறிவிப்பு வெளியாக இருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்