புதுவண்ணாரப்பேட்டையில் 5000 தலைப்புகள்... 5 லட்சம் நூல்கள்... களைகட்டும் புத்தக கண்காட்சி...

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், நடைபெறும் புத்தக கண் காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
x
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், நடைபெறும் புத்தக கண் காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். நான்கு நாள் கண்காட்சியில், 50 ஆயிரம் தலைப்புகளில், 5 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அரசியல், கலை, அறிவியல், வரலாறு, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. தினத்தந்தி புத்தக அரங்கத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. இதனிடையே, கோவா சென்று சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவியர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. புத்தக கண்காட்சியை விஜிபி சந்தோஷம், விக்ரமராஜா, வி.கே.டி. பாலன், ஆடை பட இயக்குநர் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். பெண்கள், குழந்தைகள், இளைஞர்களை கண்காட்சி ஈர்த்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்