தனி மாவட்டமாகும் தென்காசி... 2 நாட்கள் கருத்து கேட்பு கூட்டம்

தென்காசியை தனி மாவட்டமாக பிரிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் 2 நாட்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
தனி மாவட்டமாகும் தென்காசி... 2 நாட்கள் கருத்து கேட்பு கூட்டம்
x
தென்காசியை தனி மாவட்டமாக பிரிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் 2 நாட்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 18ஆம் தேதி  சட்டமன்ற கூட்டத்தொடரில் தென்காசியை தனி மாவட்டமாக பிரித்து அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தை பிரித்து எல்கைகள் சரி செய்யும் பணிக்காக தனி அதிகாரியாக சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தென்காசியை தனி மாவட்டமாக பிரிப்பது தொடர்பாக வருகிற 9, 10ம் தேதிகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்