"ஆடி அமாவாசை தினம் : முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு"

ஆடி அமாவாசையை ஒட்டி, திருவையாறு காவிரிக்கரையில் தண்ணீர் இல்லாததால், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
x
ஆடி அமாவாசையை ஒட்டி, திருவையாறு காவிரிக்கரையில் தண்ணீர் இல்லாததால், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.   திருவையாறு காவிரிக்கரையில் உள்ள புஷ்ப மண்டபத்துறையில் ஆண்டுதோறும் காவிரியில் நீராடி மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டது. இதையடுத்து, அதில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி அளித்து வழிபாடு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்