பொறியியல் துணை கலந்தாய்வு அதிகாலை 4 மணி அளவில் முடிந்தது...

நள்ளிரவு முழுவதும் தொடர்ந்த பொறியியல் துணை கலந்தாய்வு அதிகாலை 4 மணி அளவில் முடிந்தது...
பொறியியல் துணை கலந்தாய்வு அதிகாலை 4 மணி அளவில் முடிந்தது...
x
தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் துணை கலந்தாய்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று காலை முதலே அவர்கள் காத்திருந்த நிலையில், இரவாகியும்  கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகளுடன்  மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நள்ளிரவிலும் காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினார். இதனிடையே நள்ளிரவிலும் நீடித்த கலந்தாய்வு அதிகாலை 4 மணி அளவில் நிறைவு பெற்றது.



Next Story

மேலும் செய்திகள்