பிரிட்டனில் சிக்கித் தவிக்கும் தமிழக பொறியாளர் : தாயகம் மீட்டு வர கோரிக்கை விடுத்த குடும்பத்தினர்

பிரிட்டனில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த பொறியாளரை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் சிக்கித் தவிக்கும் தமிழக பொறியாளர் : தாயகம் மீட்டு வர கோரிக்கை விடுத்த குடும்பத்தினர்
x
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் நவீன் குமார். 28 வயதான இவர் ஈரானில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். இவர் நிறுவனம் சார்பிலான கப்பல் ஒன்று கடந்த 4ஆம் தேதி கச்சா எண்ணெயுடன் ஸ்பெயின்  சென்ற போது கப்பலை வழிமறித்த ராணுவத்தினர் அதில் இருந்த 24 பேரை கைது செய்தனர். இதில் 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த நவீன் குமாரை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்