வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவில், 6ஆம் நாளான இன்று கொடியேற்றம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சிம்மவாகனக்கொடி, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story