அத்திவரதர் தரிசனம் - விரிவான ஏற்பாடு : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்காக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
x
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்காக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வி.ஐ.பி. தரிசனம் காலை 5 மணிமுதல் மாலை 5 மணி வரை என்றும், 6 மணிக்கு மேல் ஆன்-லைன் டிக்கெட் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மாலை 5 மணிக்கு மேல் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்றும் அவர் தெளிவு படுத்தினார். சுமார் 33 பேர் உடல் சோர்வு காரணமாக மயக்கம் அடைந்ததாகவும் அவர்களுக்கு தேவையான முதலுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்